For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 அதிரடிப்படையினரை வீரப்பன் கடத்தியதாக வதந்தி

By Staff
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்:

அதிரடிப்படையைச் சேர்ந்த 3 போலீசாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று விட்டான் என்ற வதந்திபரவியதால், சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

கடந்த ஜூன் 21ம் தேதி முதல் தேவாரம் தலைமையிலான கூட்டு அதிரடிப்படையினர், வீரப்பனைத் தேடும் பணியில்ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்து, அவர்கள் வீரப்பன் வேட்டையைத் துவக்கியுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 500 புதிய அதிரடிப்படைப் போலீசார்செவ்வாய்க்கிழமை சத்தியமங்கலம் வந்து சேர்ந்தனர். புதன்கிழமை மேலும் 300 போலீசார் இங்கு வந்தனர்.

இவர்கள் அத்தாணி ரோட்டில் உள்ள அதிரடிப்படை முகாமிற்குச் சென்று அவர்கள் பணியில் சேர்ந்தனர். பின்னர்,இவர்கள் அனைவரும் சத்தியமங்கலத்தின் முக்கிய வீதிகளின் வழியாக புதன்கிழமை மாலை அணிவகுத்துச்சென்றனர்.

இந்நிலையில், 3 அதிரடிப்படைப் போலீசாரை வீரப்பன் கடத்திச் சென்றுவிட்டான் என்றும், அதற்காகவே போலீசார்அணிவகுத்து பவானிசாகர் காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி காட்டுத் தீ போலவேகமாகப் பரவியது.

இதையடுத்து, சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டிலும் இந்த வதந்தி பரவி,பரபரப்புக்குள்ளானது.

ஆனால், சத்தியமங்கலத்தில் முகாமிட்டுள்ள அதிரடிப்படை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுகேட்டபோது, எந்த போலீசாரையும் வீரப்பன் கடத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X