தே.ஜ.கூட்டணியில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்
கோல்கத்தா:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் அக்கூட்டணியில் வரும் ஜூலை21ம் தேதி இணைகிறது என அக்கட்சி தலைவர்கள் வெள்ளிக்கிழமை கூறினர்.
தெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழலில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் பங்காரு லட்சுமமணன், மற்றும் பலபாஜக தலைவர்கள் ஈடுபட்டிருந்ததாக வீடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, மம்தாபானர்ஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதிரிணாமுல். ஆனால், அங்கு அந்தக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இணையவுள்ளது என அக்கட்சியின்தலைவர்கள் கூறினர். ஆனாலும் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், மம்தாவுக்குக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திரிணாமுல் கட்சி கூட்டம் முடிந்த பின் திரிணமுல் காங்கிரசின் எம்.எல்.ஏ. பங்கஜ் பன்டாபாத்யாய்கூறுகையில், நாங்கள் மம்தா பானர்ஜிக்கு எங்கள் முழு ஆதரவையும் தெரிவித்து இருக்கிறோம். தேசிய ஜனநாயககூட்டணியில் இணைவது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்து இருக்கிறோம் என்றார்.
திரிணாமுல் காங்கிரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்சியில் இருக்கும் அனைவரும் மீண்டும் தேசியஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என விரும்புகின்றனர். இக்கூட்டணியில் இணைவதா இல்லையாஎன்பது பற்றிய இறுதி முடிவை இந்த மாதம் 21ம் தேதி நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தின் போது மம்தாஅறிவிப்பார் என்றார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 23ம் தேதி கூடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின், இப்போது திரிணாமுல் காங்கிரசுக்குஇருக்கும் ஒரே வழி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதுதான். ஆனாலும், இதுபோல "பல்டி"அடித்துக் கொண்டடே இருப்பதற்காக அவர் கட்டாயம் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மம்தா பானர்ஜி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதை மேற்கு வங்க பா.ஜ.கவினரும்விரும்பவில்லை. பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறுகையில், மீண்டும் மம்தாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாகஇருந்தால், அவர் நடந்து கொண்ட விதத்தை கவனத்தில் கொண்டு, அதன் பின் முடிவு எடுக்க வேண்டும் எனநாங்கள் மத்திய தலைமையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
மம்தா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது என முடிவு எடுத்தாலும், தன்னை எதிர்த்த அஜீத் பாஞ்சா மீது,அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் முன் அஜீத் பாஞ்சவைகட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்றும் தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. இவர்கள் அனைவருமேதிரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதை வரவேற்றிருகிறார்கள் எனகூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை முஷாராப்புடன் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் மம்தாவுக்கு அழைப்புவந்திருப்பதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications