சென்னையில் 4 பெண்கள் திடீர் மாயம்
சென்னை:
சென்னையில், வெவ்வேறு சம்பவங்களில் 4 இளம்பெண்கள் திடீரென காணாமல் போய் விட்டனர். அவர்களைப்போலீஸார் தேடி வருகின்றனர்.
இதேபோல, அனிதா என்ற பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அனிதாகொரட்டூரைச் சேர்ந்தவர். இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருமாம். கடந்த 8ம் தேதி தனதுகுழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அனிதா. அதன் பிறகு அவரைக் காணவில்லை.
மாங்காடு பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த எஸ்தர் ராணி (19) என்ற பெண்ணைக் காணவில்லை என அவரதுவீட்டினர் புகார் கொடுத்துள்ளனர். எஸ்தர் எக்ஸ்போர்ட் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருகிறார்.
அதே மாங்காடு பரணிபுத்தூரைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. 20 வயதாகும் இவர், கடந்த 10ம் தேதி டாக்டரிடம்போவதாக கூறி விட்டுச் சென்றவரைக் காணவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications