காஷ்மீரில் பந்த்
ஜம்மூ:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து ஜம்மூ-காஷ்மீரில் இன்று பந்த்அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த பந்த்துக்கு தீவிரவாத அமைப்புகளும், பழமைவாத மதவாத அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை லக்ஷர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு தான் மிகக் கடுமையாகஎதிர்த்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுவதால் காஷ்மீர் முழுக்க மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எல்லையிலும் இந்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பந்தை முன்னிட்டு,பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாககு காணப்படுகிறது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அவ்வளவாக இல்லை. கடைகள் பெருமளவில் மூடப் பட்டுள்ளன.
தெருக்களில் ஆங்காங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளை மூடச் சொல்லியும்,வாகனங்களை நிறுத்தச்சொல்லியும், தீவிரவாத அமைப்பினர், மிரட்டி வருவதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்களும், அலுவலகம்செல்வோரும் பெரும் அலைக்கழிப்புக் குள்ளாகின்றனர்.
இருப்பினும்,அசம்பாவிதம் எதுவும் நடந்ததாகத் தகவல்கள் இல்லை. பெருமளவில் போலீஸ் பந்தோபஸ்துபோடப்பட்டுள்ளது.