போலீசாரை ஜெயலலிதா காட்டுமிராண்டிகளாக்கி விட்டார்-: பா.ம.க. குற்றச்சாட்டு
திண்டிவனம்:
கருணாநிதி கைது நடவடிக்கையில், முதல்வர் ஜெயலலிதா காவலர்களை காட்டுமிராண்டிகளாக மாற்றிவிட்டதாகபா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மதசார்பற்ற அதிமுக கூட்டணியிலிருந்து விலகியபின் பா.ம.க நடத்திய முதல் பொதுக்குழு கூட்டம் நேற்றுமாலை(சனிக்கிழமை), திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது.
அதில்,
சுயமரியாதை மற்றும் தன்மானம் கருதி, கூட்டணியிலிருந்து வெளியேறியதை பொதுக்குழு வரவேகிறது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில், காவலர்களை ஏவிவிடட காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறது.
மத்திய அரசு தலையிட்டு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரசுடன் ரகசிய உறவை ஏற்படுத்தி, பாண்டிச்சேரியில் பா.ம.க வை தோற்கடித்த அதிமுகவின்சந்தர்ப்பவாதபோக்கை கண்டிக்கிறது.
அடுத்த கட்டமாக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாட்டளி மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படாததால் தான் அக் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்துவிலகியது என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் தனது மகன் அன்புமணியை எம்.பியாக்க விரும்பினார், பின்னர்அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தாவி அன்புமணியை மத்தியஅமைச்சராக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா பாட்டாளி மக்கள் கட்சிக்கு எம்.பி. பதவி தராமல் ஆப்பு அடித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
Anbumani: இந்த 108 நாட்களில்! சவுமியா உடலில் ஆவி புகுந்துவிட்டது! அன்புமணி கலகல! -
“ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டது.. முடிவெடுக்கும் நிலையில் இல்லை”.. சிவில் நீதிமன்றத்தில் அன்புமணி மனு -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்











Click it and Unblock the Notifications