போலீசாரை ஜெயலலிதா காட்டுமிராண்டிகளாக்கி விட்டார்-: பா.ம.க. குற்றச்சாட்டு
திண்டிவனம்:
கருணாநிதி கைது நடவடிக்கையில், முதல்வர் ஜெயலலிதா காவலர்களை காட்டுமிராண்டிகளாக மாற்றிவிட்டதாகபா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மதசார்பற்ற அதிமுக கூட்டணியிலிருந்து விலகியபின் பா.ம.க நடத்திய முதல் பொதுக்குழு கூட்டம் நேற்றுமாலை(சனிக்கிழமை), திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது.
அதில்,
சுயமரியாதை மற்றும் தன்மானம் கருதி, கூட்டணியிலிருந்து வெளியேறியதை பொதுக்குழு வரவேகிறது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில், காவலர்களை ஏவிவிடட காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறது.
மத்திய அரசு தலையிட்டு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரசுடன் ரகசிய உறவை ஏற்படுத்தி, பாண்டிச்சேரியில் பா.ம.க வை தோற்கடித்த அதிமுகவின்சந்தர்ப்பவாதபோக்கை கண்டிக்கிறது.
அடுத்த கட்டமாக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாட்டளி மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படாததால் தான் அக் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்துவிலகியது என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் தனது மகன் அன்புமணியை எம்.பியாக்க விரும்பினார், பின்னர்அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தாவி அன்புமணியை மத்தியஅமைச்சராக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா பாட்டாளி மக்கள் கட்சிக்கு எம்.பி. பதவி தராமல் ஆப்பு அடித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.