காங்கிரசில் சேருவாரா வாழப்பாடி ராமமூர்த்தி?
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அக் கட்சியின் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும் தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவருமானவாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அவர் முயற்சிமேற்கொண்டுள்ளார்.
மதுரையில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநாட்டின்போது பிரிந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள்அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தி முன்னிலையில்அழைப்பு விடுத்தார் இளங்கோவன்.
முதல் கட்டமாக வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரசுக்கு திரும்ப கொண்டு வர முயன்றுவருகிறார். வாழப்பாடி ராமமூர்த்தியும் அதற்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியாவும்பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு இணையான வன்னியர்தலைவர்என்பதால் வாழப்பாடி ராமமூர்த்தி வரவு லாபம்தான் என கணக்கு போடுகிறதாம்காங்கிரஸ்.
மூப்பனாரை எப்படி காங்கிரசுக்கு இழுப்பது என்ற கவலையில் உள்ளார் இளங்கோவன்.இருப்பினும், சோனியா வேண்டுகோள் விடுத்தால் காங்கிரசில் இணைவது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று இளங்கோவன் நம்புகிறார்.
மூப்பனாருக்கும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் எப்போதுமே ஒத்து வந்ததில்லை. முனபுமூப்பனாரும் வாழப்பாடியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இருவரும் எப்போதுமேமுகம் பார்த்துக் கூட பேசிக் கொண்டது கிடையாது.
1989ம் ஆண்டு தமிழத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றுமண்ணைக் கவ்வியபோது எரிச்சலடைந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மூப்பனாரை நீக்கிவிட்டு வாழப்பாடிராமமூர்த்தியைத் தலைவராக்கினார்.
அப்போது ஐ.என்.டி.யு.சி. தொழிலாளர் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகமிகத் தீவிரமாக செயல்பட்டு வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. தான் பதவியில்ல் இருந்த 7ஆண்டுகளும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராகவும் ஆதரவாகவும்அறிக்கைகள் விட்டே பரபரப்பான அரசியல் நடத்தியவர் வாழப்பாடி.
1996ம் ஆண்டில் நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டபோது அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே கட்சிக் கொடியைஅரைக் கம்பத்தில் பறக்கவிடுவேன் என்று பிரதமரையே மிரட்டியவர். இதனால், இவரைகட்சியிலிருந்து நீக்கினார் நரசிம்மராவ்.
பின்னர் என்.டி.திவாரி-அர்ஜூன் சிங் துவங்கிய திவாரி காங்கிரசில் சேர்ந்தார். பின்னர்அவர்களிடம் இருந்தும் விலகி தமிழக ராஜிவ் காங்கிரசை உருவாக்கினார்.
இப்போதும் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். அதிமுகவுடனும் ஒரு முறை கூட்டணிவைத்தார். எம்.பியானார். மத்திய அமைச்சருமானார். பின்னர் திமுகவுடன் கூட்டணிவைத்தார்.
இப்போது யார் கூட்டணியிலும் அவர் இல்லை.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications