காங்கிரசில் சேருவாரா வாழப்பாடி ராமமூர்த்தி?
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அக் கட்சியின் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும் தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவருமானவாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அவர் முயற்சிமேற்கொண்டுள்ளார்.
மதுரையில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநாட்டின்போது பிரிந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள்அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தி முன்னிலையில்அழைப்பு விடுத்தார் இளங்கோவன்.
முதல் கட்டமாக வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரசுக்கு திரும்ப கொண்டு வர முயன்றுவருகிறார். வாழப்பாடி ராமமூர்த்தியும் அதற்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியாவும்பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு இணையான வன்னியர்தலைவர்என்பதால் வாழப்பாடி ராமமூர்த்தி வரவு லாபம்தான் என கணக்கு போடுகிறதாம்காங்கிரஸ்.
மூப்பனாரை எப்படி காங்கிரசுக்கு இழுப்பது என்ற கவலையில் உள்ளார் இளங்கோவன்.இருப்பினும், சோனியா வேண்டுகோள் விடுத்தால் காங்கிரசில் இணைவது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று இளங்கோவன் நம்புகிறார்.
மூப்பனாருக்கும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் எப்போதுமே ஒத்து வந்ததில்லை. முனபுமூப்பனாரும் வாழப்பாடியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இருவரும் எப்போதுமேமுகம் பார்த்துக் கூட பேசிக் கொண்டது கிடையாது.
1989ம் ஆண்டு தமிழத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றுமண்ணைக் கவ்வியபோது எரிச்சலடைந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மூப்பனாரை நீக்கிவிட்டு வாழப்பாடிராமமூர்த்தியைத் தலைவராக்கினார்.
அப்போது ஐ.என்.டி.யு.சி. தொழிலாளர் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகமிகத் தீவிரமாக செயல்பட்டு வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. தான் பதவியில்ல் இருந்த 7ஆண்டுகளும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராகவும் ஆதரவாகவும்அறிக்கைகள் விட்டே பரபரப்பான அரசியல் நடத்தியவர் வாழப்பாடி.
1996ம் ஆண்டில் நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டபோது அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே கட்சிக் கொடியைஅரைக் கம்பத்தில் பறக்கவிடுவேன் என்று பிரதமரையே மிரட்டியவர். இதனால், இவரைகட்சியிலிருந்து நீக்கினார் நரசிம்மராவ்.
பின்னர் என்.டி.திவாரி-அர்ஜூன் சிங் துவங்கிய திவாரி காங்கிரசில் சேர்ந்தார். பின்னர்அவர்களிடம் இருந்தும் விலகி தமிழக ராஜிவ் காங்கிரசை உருவாக்கினார்.
இப்போதும் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். அதிமுகவுடனும் ஒரு முறை கூட்டணிவைத்தார். எம்.பியானார். மத்திய அமைச்சருமானார். பின்னர் திமுகவுடன் கூட்டணிவைத்தார்.
இப்போது யார் கூட்டணியிலும் அவர் இல்லை.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications