இந்தியா-பாகிஸ்தான் பேச்சு தோல்வி
ஆக்ரா:
ஆக்ராவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை வரை நீண்டன. இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரபும் பல்வேறு 4 முறை தனியே சந்தித்துப் பேசினர்.
அதே போல இந்திய-பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பல முறை சந்தித்துப் பேசினர்.
இவர்கள் தவிர பாகிஸ்தான் தூதுக்குழுவினரும் இந்திய அதிகாரிகளும் ஒரு பக்கம் இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தையே பேசிக் கொண்டிருந்தது. காஷ்மீர் எங்களது உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறியஇந்தியா இது குறித்து பாகிஸ்தானுடன் பேச விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.
அதே சமயம் காஷ்மீரில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும் அரசும் ஆயுதங்களையும் பயிற்சியும் அளித்து வருவதைநிறுத்த வேண்டும். இது குறித்து மட்டுமே உங்களுடன் பேச இந்தியா தயாராக உள்ளது என்று வாஜ்பாய் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதனால், இரு தரப்பிலும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தனர். இரு தலைவர்களும் சேர்ந்து கூட்டுப் பிரகடனம் வெளியிட முடியாதஅளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவின.
இதையடுத்து வாஜ்பாய்-முஷாரப் இருவரும் கையெழுதிட்ட ஒரு அறிக்கை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிலும் கூட இருதலைவர்களுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டியாவது அளிக்கலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால், அங்கும் காஷ்மீர்குறித்துத் தான் பேசுவேன் என்று பர்வேஸ் முஷாரப் கூறினார். அப்படியானால், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதம் குறித்துத் தான் நான்பேசுவேன் என வாஜ்பாய் கூற அங்கும் கருத்து வேறுபாடு தலை தூக்கியது.
இதனால், எந்தவிதமான அறிக்கையோ, பத்திரிக்கையாளர் சந்திப்போ இல்லாமல் பர்வேஸ் முஷாரப் திங்கள்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான்திரும்பினார்.
-
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications