இந்தியா-பாகிஸ்தான் பேச்சு தோல்வி
ஆக்ரா:
ஆக்ராவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை வரை நீண்டன. இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரபும் பல்வேறு 4 முறை தனியே சந்தித்துப் பேசினர்.
அதே போல இந்திய-பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பல முறை சந்தித்துப் பேசினர்.
இவர்கள் தவிர பாகிஸ்தான் தூதுக்குழுவினரும் இந்திய அதிகாரிகளும் ஒரு பக்கம் இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தையே பேசிக் கொண்டிருந்தது. காஷ்மீர் எங்களது உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறியஇந்தியா இது குறித்து பாகிஸ்தானுடன் பேச விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.
அதே சமயம் காஷ்மீரில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும் அரசும் ஆயுதங்களையும் பயிற்சியும் அளித்து வருவதைநிறுத்த வேண்டும். இது குறித்து மட்டுமே உங்களுடன் பேச இந்தியா தயாராக உள்ளது என்று வாஜ்பாய் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதனால், இரு தரப்பிலும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தனர். இரு தலைவர்களும் சேர்ந்து கூட்டுப் பிரகடனம் வெளியிட முடியாதஅளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவின.
இதையடுத்து வாஜ்பாய்-முஷாரப் இருவரும் கையெழுதிட்ட ஒரு அறிக்கை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிலும் கூட இருதலைவர்களுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டியாவது அளிக்கலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால், அங்கும் காஷ்மீர்குறித்துத் தான் பேசுவேன் என்று பர்வேஸ் முஷாரப் கூறினார். அப்படியானால், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதம் குறித்துத் தான் நான்பேசுவேன் என வாஜ்பாய் கூற அங்கும் கருத்து வேறுபாடு தலை தூக்கியது.
இதனால், எந்தவிதமான அறிக்கையோ, பத்திரிக்கையாளர் சந்திப்போ இல்லாமல் பர்வேஸ் முஷாரப் திங்கள்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான்திரும்பினார்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications