பொய் வழக்கு போடுகிறார் ஜெ.: திருநாவுக்கரசு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திமுக வினர் உள்ளிட்ட பலர் மீது தமிழக அரசு தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதைக் கண்டித்து தேசியஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவினர் உள்ளிட்ட பலர் மீது அதிமுக அரசு தொடர்ந்துபொய் வழக்கு போட்டு துன்புறுத்தி வருகிறது.

தனக்கு உதவியாளராயிருந்த பாஸ்கரனை ஹெராயின் வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டு சிறையில்தள்ளியுள்ளார் ஜெயலலிதா.

அதேபோல அண்ணா நகர் ரமேஷை விசாரனை என்ற பெயரில் போலீசார் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.இதனால்அவர் மணமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளார்.

இது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க தேசிய ஜனநாயகக்கூட்டணியின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

நீதிபதி ராமன் கமிஷன் வெறும் கண் துடைப்புக்காகப் போடப்பட்டுள்ளதாகும். காஷ்மீர் பிரச்சனை ஒரே நாளில்முடிந்து விடக் கூடியது அல்ல. எனவே வாஜ்பாய் - முஷாரப் சந்திப்பு தோல்வியில் முடிந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறு திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+