For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி அருகே லாரிகள் மோதல்: ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.

தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி என்ற இடத்தில் புதன்கிழமை இரவு 2 லாரிகள் வேகமாக எதிர் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தன.

இலக்கியம்பட்டியை கடக்கும் போது, இரண்டு லாரி டிரைவர்களும் லாரியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

இந்த விபத்தில், தங்கம் என்ற பெண் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X