சீனாவில் வெள்ளம்: 34 பேர் பலி
பீஜிங்: (சீனா)
சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனானில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் 34பேர் பலியானார்கள்.
இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா செய்திநிறுவனம் கூறியிருப்பதாவது:
சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியான வென்ஷான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் 2,000வீடுகள், 133 பள்ளிகள் சேசமடைந்துள்ளன. மேலும் 3 மின் வாரிய மையங்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின்வினியோகமும், தகவல் தொடர்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களும் நாசமடைந்துள்ளன.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் 60மில்லியன் டாலர் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
யுனானுக்கு அருகிலுள்ள பகுதியிலும் இந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 49 மக்கள் இறந்துவிட்டார்கள்என அஞ்சப்படுகிறது.
சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியில் இருக்கும் மற்றொரு பகுதியான ஜின்பிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் 25பேரைக் காணவில்லை. அவர்களும் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஏற்பட்ட நான்கு கடும்புயல் காரணமாக சீனாவில் கடும் மழை பெய்ததுதான் இந்த சேதத்திற்குகாரணம் என கூறப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications