For Daily Alerts
Just In
மூதாட்டியைக் கொன்ற அழகர் கோவில் யானை
மதுரை:
மதுரை அருகே அழகர் கோவிலில் உள்ள யானை, 65 வயது மூதாட்டியை செவ்வாய்க்கிழமை தும்பிக்கையால்தாக்கிக் கொன்றது.
இக்கோவில் யானையை அதன் பாகன் வழக்கம் போல் வெளியே அழைத்து வந்தார். அப்போது யானை திடீரெனபாகனின் கட்டுப்பாட்டை மீறி ஓடத்துவங்கியது.
யானை கட்டுப்பாடு இழந்த ஓடுவதைக் கண்டு பயந்த மக்கள் சிதறி ஓடினர்.
அப்போது கோவில் படியில் உட்கார்ந்திருந்த கோமதிஅம்மாள் (வயது 65) என்ற மூதாட்டியை யானை தன்தும்பிக்கையால் தாக்கியது. அதில் அந்த மூதாட்டி அந்த இடத்திலேயே பரிதாமாக இறந்தார்.
யானைப் பாகன் 1 மணி நேரம் கடுமையாக போராடி யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.அதற்கப்புறம்தான் அந்த யானை அமைதியானது.
Comments
Story first published: Saturday, May 12, 2001, 5:30 [IST]