ஊனமுற்ற பெண்களுக்கு உதவினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உடல் ஊனமுற்ற பெண்களுக்கு அரசு வேலைக்கான உத்தரவுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில்வழங்கினார்.
மேலும், புளியந்தோப்பைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணுக்கு கடும் ஊனமுற்றோருக்கான பராமரிப்புஉதவித்தொகையும் வழங்கினார்.
இது தவிர, குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் ஜெயலலிதா உதவித் தொகைவழங்கினார்.
சென்ற ஜனவரி மாதம் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் உயிர் மற்றும் உடமைகளை இழந்தனர். சென்னைதிருவொற்றியூரைச் சேர்ந்த சித்ரா என்ற பெண், இந்தப் பூகம்பத்தின்போது தனது கணவரின் கால்கள் துண்டிக்கப்பட்டதால் சிகிச்சைக்கு பணம் வேண்டி உதவி கோரினார்.
கோரிக்கையை ஏற்ற முதல்வர் அந்தப் பெண்ணுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.












Click it and Unblock the Notifications