கருணாநிதிக்கு கறுப்புப் பூனை பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு பிரிவின் மூலம் கறுப்புப் பூனை பாதுகப்புஅளிக்கப்படுகிறது.

சென்னை மேம்பால வழக்கில் கடந்த ஜூன் 30ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப் பட்டார். இச்சம்பவத்தின்போது,தமிழக போலீசார் வரம்பு மீறி நடந்து கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்தது.

இதற்கிடையில் கருணாநிதிக்கு தேசிய பாதுகாப்பு பிரிவின் (என். எஸ்.ஜி ) கீழ் கறுப்புப் பூனை பாதுகாப்புஅளிக்கப்படும் என்று தெரிகிறது. அவரது வயதையும், முன்னாள் முதல்வர் என்பதையும் கருத்தில் கொண்டுஇந்தப் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்படுகிறது.

இது பற்றி வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் கருணாநிதி கூறுகையில், எனக்குப் பாதுகாப்பு அளிப்பதுகுறித்து மத்திய அரசிடமிருந்து தகவல் வந்துள்ளது என்றும் ஆனால் அது எந்த வகைப் பாதுகாப்பு என்று எனக்குத்தெரியாது என்றும் கூறினார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோற்றவுடன் இதே வகைப் பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கும் வழங்கப்பட்டது. இப்போது அவருக்கு "இஸட்" பிரிவு பாதுகாப்பு வழங்கப் படுவதால் அது விலக்கிக் கொள்ளப் பட்டது.

யு.என். ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+