For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், பேரணி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

நாடாளுமன்றக் கூட்டத்தைத் திடீரென்று முடித்து வைத்ததை எதிர்த்து, இலங்கை எதிர்க்கட்சியினர் வியாழக்கிழமைகாலையில் தடையை மீறி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குள், மறு தேதியைக் குறிப்பிடாமல்கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை திடீரென்று ஒத்தி வைத்தார் இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா.

இதனால் எதிர்க்கட்சியினர் அனைவரும் கொந்தளித்தனர். கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வாசலில்போடப்பட்டிருந்த அனைத்துப் பாதுகாப்புத் தடைகளையும் மீறி அவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்புகுந்தனர். அன்றைய கூட்டத்தையும், ஆளுங்கட்சி இல்லாமலேயே நடத்தினர் (?).

இந்நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரி எதிர்க்கட்சியினர் வியாழக்கிழமை கண்டனப்பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் பேரணியை நடத்த விடாமல், கொழும்பு முழுவதும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனாலும், தடைகளை எல்லாம் மீறிய எதிர்க்கட்சியினர், கண்டனப் பேரணியைத் தொடங்கினர். தொடர்ந்து,அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால், பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் தொடர்ந்து நடத்த விடாமல் போலீசார் எவ்வளவோ தடுத்துப்பார்த்தனர். ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், போலீசார் மீது கல்வீச ஆரம்பித்தனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக்கலைத்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X