மாறன், பாலுவுக்கு எதிரான மனு ஏற்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டமனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்த முடிவை சென்னை உயர்நீதிமன்றம்ஒத்திவைத்தது.

கருணாநிதியைக் கைது செய்த போலீசார், அவரை நீதிபதியிடம் அழைத்துச் செல்ல முயன்ற போது, அந்தக் காரில்உட்கார்ந்த மாறன், காரிலிருந்து இறங்க மறுத்தார். மேலும், அவரை அப்புறப்படுத்த முயன்ற போலீசாரை அவர்தாக்கினார்.

இதுதவிர, சி.பி.சி.ஐ.டி அலுவலக கதவையும் கார் மூலம் முட்டி மோதி உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

சி.பி.சி.ஐ.டி அலுவலக கதவை திறக்குமாறு மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவும் போலீசாரை மிரட்டி உள்ளார்.

பொறுப்பான பதவியில் இருக்கும் அவர்கள் போலீசாரை தங்கள் கடமையை செய்யவிடாமல் தடுத்ததற்காகஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்தால் நாட்டின்ஜனநாயகம் சீர் கெட்டு, சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து வரும் என்றும் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமிஎன்பவர் மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கே.ஜெயலின் மற்றும் நீதிபதி பி. தங்கவேலுஅடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா வேண்டாமாஎன்பது குறித்த உத்தரவை மறு தேதி எதுவும் குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+