ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு இன்டர்நெட் வசதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான தகவல்கள் அடங்கிய இணையதளத்தை வியாழக்கிழமை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இவர்கள் இது போன்ற தகவல்களைப் பெறவும், புதிதாக ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு வழிமுறைகளையும்தொகுத்து வழங்கும் இணையதளம் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை வியாழக்கிழமை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஓய்வு பெறுபவர்கள், பணியில் இருக்கும் போது இறந்து போன அரசு ஊழியர் குடும்பத்தினர், ஓய்வு ஊதியர்களின்வாரிசுகள் ஆகியோருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம், 2 லட்சத்து 71 ஆயிரம் ஓய்வு ஊதியர்களும், 1 லட்சத்து 27 ஆயிரம் ஓய்வு ஊதியர்களின்வாரிசுகளும் பயனடைவார்கள்.
இந்த இணையதளத்தின் முகவரி: http://www.tn.gov.in/dop












Click it and Unblock the Notifications