For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர்காயமடைந்தனர்.

இந்த மாவட்டத்தின் குமார்கஞ்ச் என்ற ஊரிலிருந்து பலூர்காட்டுக்கு இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, பலூர்காட்ஸ்டேடியத்தின் அருகே பஸ்ஸில் இருந்த குண்டு பயங்கரமாக வெடித்தது.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 4 பேர் பலியாயினர். காயமடைந்தவர்களில், 16 பேருக்கு 80 சதவிகிதம் தீக்காயம்ஏற்பட்டுள்ளது.

வெடித்தது சாதாரணக் குண்டாக இருக்காது என்று கருதிய போலீசார், தடயவியல் நிபுணர்களைச் சம்பவ இடத்திற்கு விரைந்துஅனுப்பியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X