காஷ்மீரில் 15 இந்துக்கள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

காஷ்மீர்-தோடா மாவட்டத்தில் 30 இந்துக்களை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

ஆனால், 30 பேர் கொல்லப்பட்டதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த13 பக்தர்கள் பலியாயினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சேர்ஜி கிராமத்திற்குள்தீவிரவாதிகள் புகுந்து, அங்குள்ள மக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்கூறினர்.

ஆக்ரா உச்சி மாநாட்டுக்குப் பிறகு, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் படையினர்செயல்பட்டு வருவதாகவும், அதன் விளைவே இந்தத் துப்பாக்கிச் சூடு என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குக் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+