முஸ்லிம் கைதிகளை விடுவிக்க முஸ்லிம் முன்னணி கோரிக்கை
திருச்சி:
தமிழக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் சேவை முன்னணி (டி.என்.எம்.எஸ்.எம்.) தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு பின் இதன் பொதுச் செயலாளர் பேராசிரியர். எஸ்.எம்.எம்,. முகமது அலிசெய்தியாளர்களிடம் கூறுகையில். எந்த குற்றமும் செய்யாமல் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கைதிகளை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
முஸ்லிம்களுக்கு அவர்கள் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வேலை மற்றும் படிப்பிற்கு இட ஒதுக்கீடு செய்யவேண்டும். முஸ்லிம்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி, மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
வாக்ஃப் போர்ட் சிறந்த முறையில் செயல்படும் விதமாக சீரமைக்கப்பட வேண்டும். வாக்ஃப் போர்டில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்என்றார்
மேலும், தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகையைகணக்கெடுக்குமாறு அங்கு உள்ளவர்களையும் இந்த கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் அவர்கூறினார்.
யு.என்.ஐ.