முன்னாள் டி.ஜி.பி.யும் கோர்ட்டில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் தமிழக டி.ஜி.பியான எப்.சி. ஷர்மா திங்கள்கிழமை நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் ஆஜராகிகையெழுத்திட்டார்.

தமிழக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளைத் தாக்கியதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும்தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் மற்றும் ஷர்மா ஆகியோர் மீதுப்ரீத்தி பாஸ்கர் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

சென்னை மெட்ரோபாலிடன் நீதிபதியின் ஆணையின் பேரில் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்)பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி இல்லாமல் யாரும் சிறைக்குள் செல்ல முடியாது என்றும்,இதனால், முஸ்லிம் கைதிகள் தாக்கப்பட்டது மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கில் தனக்கு எவ்விதத்தொடர்பும் இல்லாததால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி ஷர்மா மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், திங்கள்கிழமை தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்து ஷர்மாவுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.

இதன் அடிப்படையில், ஷர்மா திங்கள்கிழமை நீதிபதி அசோக்குமார் முன் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+