ரயிலில் தாலி பறித்த திருடன்: விரட்டிப் பிடித்தார் இன்ஸ்பெக்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலியைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்ஒருவர் விரட்டிப் பிடித்து, அவனிடமிருந்து நகைகளை மீட்டார்.
சென்னையை அடுத்த பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த எல்லைப்பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடைய மனைவியின் கழுத்திலிருந்த தாலியையும், 2 பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓடினான்.
ஆனால், அதே ரயிலில் இருந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டரான ஜெய்பால் என்பவர் உடனே அந்தத் திருடனைவிரட்டிச் சென்று பிடித்தார்.
பிடிபட்ட திருடன் கைது செய்யப்பட்டு, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அவனிடமிருந்து மீட்கப்பட்ட தாலியும், நகையும் அந்தப் பெண்ணிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications