இலங்கை சிறையிலிருந்த 16 தமிழ் மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் கடந்த 3 மாதங்களாக சிறைவைக்கப் பட்டிருந்த 16 தமிழ் மீனவர்கள் திங்கள்கிழமை விடுதலைசெய்யப் பட்டனர்.

கடந்த ஏப்ரல் 18-ந்தேதி சில தமிழ் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை போலீசார், அது தங்கள் நாட்டு எல்லை என்று கூறி அத்தனைமீனவர்களையும் பிடித்துச் சென்றனர்.

இதேபோல கடந்த மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் 2 தமிழ்மீனவக் கும்பல்கள் கதுை செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களில் இதுவரை மொத்தம் 66 தமிழ் மீனவர்களையும், 18 படகுகளையும் இலங்கைபோலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். 66 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்றனர். தமிழ் மீனவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பிறகு, 22 பேர் கடந்த 10-ந்தேதிவிடுதலை செய்யப்பட்டு இந்தியக் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப் பட்டவர்களில் 2 வது பிரிவினர் 16 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 28 தமிழ் மீனவர்கள் இன்னும் இலங்கைச் சிறையிலேயே வாடி வருகின்றனர்.

இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 73 இலங்கை மீனவர்களும் இந்தியச் சிறைகளில் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+