கிரிக்கெட்டுக்கு பிரச்சனையில்லை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கொழும்பில் விடுதலைப் புலிகள் நடத்திய மிக பயங்கர தாக்குதலையும் மீறி மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிதடையின்றி நடந்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் கோகோ-கோலா கோப்பை கிரிக்கெட்போட்டிகள் 18ம் தேதி கொழும்பில் தொடங்கியது. இந்தப் போட்டிகள் இன்னும் நடந்து வருகின்றன.

இந் நிலையில் தான் கொழும்பு விமானப் படைத் தளத்திலும், சர்வதேச விமான நிலையத்திலும் செவ்வாய்க்கிழமைபுலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், கொழும்பு நகரமே பதற்றத்துடன் காணப்பட்டது.

விமான நிலையத்தை ஒட்டி நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு முழுவதுமேபரபரப்பாகக் காணப்பட்டது. இன்று நடந்து கொண்டிருக்கும் இலங்கை-நியூஸிலாந்து இடையிலான போட்டிநடக்குமா என்பதிலும் சந்தேகம் நிலவியது.

இந்திய, நியூஸிலாந்து அணி நிர்வாகிகளும் அங்கு விளையாட அச்சம் தெரிவித்தனர்.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய, நியூஸிலாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது.போட்டிகளை வன்முறை, தாக்குதல் ஏதுமின்றி நடத்திக் காட்டுவதாகவும், எந்தப் போட்டியையும் ரத்து செய்யும்திட்டமில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி இன்று (புதன்கிழமை) இலங்கை- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிநடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+