புதிய அமெரிக்க தூதர் இன்று பதவியேற்பு
டெல்லி:
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று டெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பதவி ஏற்றுக் கொள்கிறார்.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரையும் மாற்றியுள்ளார் புஷ். ராபர்ட் பிளாக்வில் என்பவரைக் கடந்த மார்ச் 22ம்தேதி அமெரிக்கத் தூதராக நியமித்தார். கடந்த வாரம் அமெரிக்காவில் இதற்கான முறைப்படியான உத்தரவையும்பிளாக்வில் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, கிளிண்டன் காலத்தில் அமெரிக்கத் தூதராக இருந்த ரிச்சர்ட் செலஸ்டி, வெள்ளிக்கிழமைஇந்தியாவுக்கு ஒரு "குட்-பை" சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். அவரிடமிருந்து தூதரகப் பொறுப்புகள்அனைத்தையும் பெற்றுக் கொள்கிறார் பிளாக்வில்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில்பேராசிரியராக இருந்த பிளாக்வில்லை அழைத்து, இந்த அமெரிக்கத் தூதர் பதவியைக் கொடுத்துள்ளார்அமெரிக்க ஜனாதிபதி புஷ்.
அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ஏராளமான புத்தகங்களையும் பிளாக்வில் எழுதியுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கவுன்சிலில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இயக்குநராகவும், ஐரோப்பாவில் நடைபெற்ற வார்சாஒப்பந்தத்தின்போது அமெரிக்காவின் முக்கிய அங்கத்தினராகவும் பல பொறுப்புகளை இதற்கு முன்னர் ஏற்றுள்ளார்ராபர்ட் பிளாக்வில்.
இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பிளாக்வில் மேலும் வளர்ப்பார் என்ற பலத்தநம்பிக்கையுடன் அவரை அனுப்பியுள்ளார் ஜார்ஜ் புஷ்.












Click it and Unblock the Notifications