For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கல்பாக்கம்:

கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க உள்ள மற்றொரு அணுக்கரு உலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது கல்பாக்கம். இங்குள்ள இந்திராகாந்திஅணு ஆராய்ச்சி மையம், ரூ.300 கோடி செலவில் புதிய அணுசக்தி மையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்திநிலையத்திலிருந்து வெளிப்படும் கழிவு நீரால் கடல் மீன்கள் பாதிக்கப்படுகின்றன. கதிர்வீச்சினால் நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பாலாற்றுப் படுகையில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது என்று அம்மக்கள் கூறுகிறார்கள்.

இக்கருத்தையே செங்கல்பட்டு எம்.எல்.ஏ.வும் வலியுறுத்தி வருகிறார்.

இப்படித்தான் ஏற்கனவே ஒரு உலை அமைக்க இடம் வழங்கியவர்களுக்கு, தங்கள் வீட்டில் ஒருவருக்கு வேலைதருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னும் தரவில்லை. மேலும் இந்த உலையை ஏற்படுத்துவதால்சுற்றுப்புறமும் மாசுபடுகிறது.

இருப்பினும் சிலர் இத்திட்டத்தை வரவேற்கத்தான் செய்கின்றனர். இதுகுறித்துப் பேசிய கல்பாக்கம்அணுமின்நிலையம் இயக்குநர் டாக்டர் போஜ் கூறியதாவது:

நிலம் வழங்கிய 200 பேர்களில் 170 பேருக்கு அவர்களின் கல்வித்தகுதிக் கேற்ற வேலை வழங்கப் பட்டுள்ளது.எஞ்சிய 30 பேருக்கு குறைந்தபட்ச கல்வியறிவும் இல்லாததால் வேலை வழங்க இயலவில்லை. அதிலும் சிலர்போலி சான்றிதழ்களை கொண்டுவந்தனர்.

மேலும் போதிய பாதுகாப்பு வசதியோடுதான் அணுஉலை அமைக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எந்த தீங்கும்நேராது.

இத்திட்டத்தின் மூலம் சிறு கம்பெனிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். எனவே பொதுமக்கள் இதைத் தடுக்காமல்ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் டாக்டர் போஜ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X