இன்று கூடுகிறது பாமக நிர்வாகக் குழு
தர்மபுரி:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) திண்டிவனத்தில் நடக்கிறது.
பாமகவின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நடிகர்சிவாஜி கணேசனின் மறைவை முன்னிட்டு, அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மறு தேதிஅறிவிக்கப்படாமல் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பாமக நிர்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸின் இல்லமான தைலாபுரம் தோட்டத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கும் இக்கூட்டத்திற்கு, ஜி.கே. மணி தலைமை வகிப்பார். மாநில நிர்வாகிகள்மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சேர்ந்த பிறகு நடக்கும் பாமகவின் முதல் நிர்வாகக் குழு கூட்டம்என்பதால், இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.