பா.ம.க. விவகாரத்தில் பின்வாங்குகிறது திமுக
கடைசி உணவு:
ராஜ் பெர்ணான்டோ விளையாட்டு மைதானத்தை அடைந்த புலிகள் அங்கு தங்களது இறுதி உணவை அருந்தினர். பின்னர் பலசிறிய குழுக்களாகப் பிரிந்து தென்னந்தோப்புகள் வழியே விமான தளத்தின் சுற்றுப் புற வேலியை அடைந்தனர். அங்கு இரும்புவேலியை கத்தரித்துக் கொண்டு அதிகாலை 3.50 மணிக்கு விமானத் தளத்தின் பின் பகுதிக்குள் புகுந்தனர்.
சில புலிகள் விமானங்களுக்குள் புகுந்து தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கி விமானத்தையும் தங்கள்உடலையும் பஸ்மாக்கிக் கொண்டார்கள்.
விமானங்களுடன் உடல்களை தகர்த்துக் கொண்ட புலிகள்:
மேலும் சில புலிகள் அருகாமையில் உள்ள பண்டாரநாயகே விமானப் நிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு துப்பாக்கியால்அவர்கள் சுட்டு எச்சரிக்க விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். இதன் பின்னர்அந்த விமானங்களில் ஏறி தங்களையும் தகர்த்து விமானங்களையும் தகர்த்து எரிந்தனர் புலிகள்.
விமான நிலையத்தில் நின்றிருந்த 6 ஏர்-பஸ் பயணிகள் விமானங்களையும் தீக்கிரையாக்கிவிட்டு இறந்தது அந்த கரும்புலிப் படை.விமானப் படை மையத்திலும், விமான நிலையத்திலும் நின்றிருந்த எந்த விமானமும் புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.அங்கிருந்த பெட்ரோல் சேமிப்பு கிடங்குகளைக் கூட புலிகள் விட்டு வைக்கவில்லை.
இந்த கரும்புலிகளின் 4 மணி நேர அதிரடித் தாக்குதலுக்கு இலங்கை கொடுத்த விலை ரூ. 3,500 கோடி.
கருப்பு ஜூலைக்கு பதிலடி:
1983ம் ஆண்டு ஜூலை மாத்ததில் தான் இலங்கையில் இனக் கலவரம் வெடித்தது. 3,000 அப்பாவித் தமிழர்கள் இலங்கையில்தெருக்களில் ரத்தம் சிந்தி உயிர் நீத்தார்கள். இந்தத் தாக்குதல் தான் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் போராளிக்குழுக்கள் மிகத் தீவிரமான நிலையை எடுக்கக் காரணமானது.
இந்த ஜூலையை இலங்கைத் தமிழர்கள் கருப்பு ஜூலை என்று தான் அனுஷ்டிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications