தாக்குதலுக்கு கரும்புலிகள் தயாரானது எப்படி?
கொழும்பு:
கடந்த வாரம் கொழும்பு விமானப் படைத் தளத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன்தான் ப்ராஜக்ட் கடுநாயகே என்ற பெயரில் திட்டம் வகுத்துக் கொடுத்தார் என்று தெரியவந்துள்ளது.
தனது உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மன் மற்றும் 2 மூத்த புலிகளுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைபிரபாகரன் வகுத்தார். பிற தாக்குதல்களைப் போல் அல்லாது இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு கட்டத்தையும் வகுத்துக்கொடுத்துள்ளார் பிரபாகரன்.
சிறுத்தைகளை களமிறக்கிய பிரபாகரன்:
மிக பயங்கர பயிற்சிகள் பெற்ற தனது கமாண்டோ படையான சிறுத்தைகளை களத்தில் இறக்க பிரபாரகன் உத்தரவிட்டது தான்இந்தத் தாக்குதலுக்கான பிள்ளையார் சுழி எனக் கருதப்படுகிறது. மேலும் விமான எதிர்ப்புத் தாக்குதல்களில் தேர்ச்சி பெற்றபுலிகளையும், ரகசியப் படையைச் சேர்ந்த புலிப் படையினரையும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
யாழ்பாணம் மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட-கிழக்குப் பகுதிகளில் இலங்கை விமானப் படை விமானங்களின் தாக்குதல்தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததையடுத்து அரசுக்குப் பாடம் புகட்ட கடந்த ஆண்டே இந்தத் தாக்குதல் திட்டத்தைபிரபாகரன் வகுத்துவிட்டார்.
ஆனால், நார்வே தூதரின் அமைதி முயற்சிகள் அப்போது தான் சூடுபிடித்திருந்தன. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் தெற்குப்பகுதியில் எந்தத் தாக்குதலும் நடத்தக் கூடாது என்று நார்வே தூதர் பிரபாகரிடனிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இதனால்தனது தாக்குதல் திட்டத்தை ஒத்தி வைத்தார்.
ஆனால், கடந்த ஜூன் 30ம் தேதி புலிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் விமானப் படை விமானங்கள் தமிழர்களின் வீடுகள்மீதும் அவர்களின் குடியிருப்புகள் மீதும் கடும் தாக்குதல் நடத்தின. மிக பயங்கரமான அந்தத் தாக்குதலில் புலிகளுக்கு ஏற்பட்டசேதத்தைவிட அப்பாவித் தமிழர்களுக்குத் தான் மிக அதிகமான சேதம் ஏற்பட்டது.
உத்தரவிட்ட பிரபாகரன்:
இதையடுத்து தனது தாக்குதல் திட்டத்துக்கு பிரபாகரன் மீண்டும் உயிர் கொடுத்தார். அதற்கு முன்னதாக ஒரு எச்சரிக்கையும்கொடுத்தார். கடந்த 2ம் தேதி புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கையில், விமானப் படைத் தாக்குதலைஉடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை அரசும் ராணுவமும் சந்திக்க வேண்டியிருக்கும் எனக்கூறப்பட்டிருந்தது.
அன்றைய தினமே கொழும்பு விமானப் படைத் தளத்தைத் தாக்கும் தனது திட்டத்தை அமல்படுத்தவும் உளவுப் பிரிவுக்குஉத்தரவிட்டார். இந்தத் திட்டத்துக்கு புலிகள் வைத்த பெயர் ப்ராஜக்ட் கடுநாயகே.
இதையடுத்து சிறுத்தைகள், விமான எதிர்ப்புப் படையினர், உளவுப் படையினர் அடங்கிய 12 பேர் கொண்ட தாக்குதல் குழுதேர்ந்தெடுக்கப்பட்டது. இவர்கள் தற்கொலைப் படையான கரும்புலிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications