For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூட்டையில் பிணம்: தகவல் தருபவர்களை எச்சரிக்க வீரப்பன் கும்பல் செய்த கொலையா?

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

அந்தியூர் காட்டுப் பகுதியில் சாக்கு மூட்டையில் தலைவேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடந்தவர்யார் என்பதைக் கண்டுபிடிக்க ஆப்பக்கூடல் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் அதிரடிப் படையினருக்கும், அவர்களுக்கு தகவல் தருபவர்களுக்கும்எச்சரிக்கை தரும் வகையில் வீரப்பன் கும்பல் தான் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

வீரப்பன் நடமாட்டம் நிறைந்த அத்தாணியையடுத்த வரக்கோம்பை என்ற இடத்தில் ஒரு சாக்கு மூட்டையில் துர்நாற்றம்வீசியதையடுத்து அதை போலீசார் கைப்பற்றினர். அதில் தலை துண்டிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது. புழுக்கள்அரித்துக் கொண்டிருந்தன. கொலையாகி பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

முதலில் வீரப்பனின் உடலாக இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதனால், முழு போலீஸ்துறையும் பரபரப்பானது.

ஆனால், உடல் வீரப்பனுடையது அல்ல என்பது தெளிவாகிவிட்டது. அந்த நபர் நீல நிற லுங்கி அணிந்துள்ளார். அவருக்கு சுமார்35 வயதிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

தன்னைப் பற்றி அதிரடிப் படையினருக்குத் தகவல் தரும் கிராமத்தினரை பயமுறுத்தவே வீரப்பன் கும்பல் இந்தக் கொலையைசெய்திருக்க வேண்டும் என அதிரடிப் படையினர் கருதுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X