For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் காங்கிரசில் சேருகிறார் வாழப்பாடி ராமமூர்த்தி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தனிக் கட்சி நடத்தி வரும் வாழப்பாடி ராமமூர்த்தி அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமாகிறார்.

டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்த வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் சேர விரும்புவதாகக் கூறினார். இதையடுத்துஅவரை காங்கிரசில் சேர்க்க சோனியா காந்தி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது ராஜிவ் காங்கிரஸ் கட்சியை காங்கிரசில் இணைக்கவுள்ளார் வாழப்பாடிராமமூர்த்தி.

அணி மாறுவதில் ராமதாசுக்கு இணையான தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும்இடையே பிரச்சனை உருவானது. ஆனாலும் 1998ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி எனஅப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தெரிவித்ததையடுத்து காங்கிரஸைவிட்டு விலகினார்.

என்.டி. திவாரியும், அர்ஜூன் சிங்கும் நடத்திக் கொண்டிருந்த திவாரி காங்கிரசில் சேர்ந்தார். தமிழகத்தில் போட்டியிட்டு பெரும்தோல்வி கண்டார். பின்னர், அதிலிருந்து விலகி தமிழக ராஜிவ் காங்கிரசைத் துவக்கினார்.

பின்னர் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து சேலம் எம்.பி. தொகுதியில் வென்றார். இவருக்கு வாஜ்பாயின் மத்தியஅமைச்சரைவயில் பெட்ரோலியத் துறை அமைச்சர் பொறுப்பும் வாங்கித் தந்தார் ஜெயலலிதா.

வாஜ்பாயின் ஆட்சியை ஜெயலலிதா கவித்தார். இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அதிமுகவுக்குப் பதில் திமுக இடம் பிடித்தது.வாழப்பாடியும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்தார்.

1999ம் ஆண்டு நாடாளுன்றத் தேர்தலில் ராமதாஸ், வாழப்பாடி இருவருக்கும் சேர்த்து கருணாநிதி 7 தொகுதிகள் கொடுத்தார்.அதில் இரண்டை வாழப்பாடி தருவதாக கருணாநிதியிடம் கூறிய ராமதாஸ் ஒன்றை மட்டும் தான் கொடுத்தார்.

இதனால் ராமதாஸ்-வாழப்பாடி சண்டை மூண்டது. வேறு வழியில்லாமல் ராமதாஸ் கொடுத்த ஒரே ஒரு சீட்டை மட்டும் வாங்கிக்கொண்டு சேலத்தில் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் செல்வகணபதியிடம் தோற்றார்.

அதுமுதல் ராமதாசும் வாழப்பாடியும் தெருச்சண்டை போட்டு வந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தான் வாழப்பாடியை தூண்டிவிடுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ராமதாஸ் விலகிப்போய் மீண்டும் இப்போது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்குத் தான் கருணாநிதி அதிக இடம் ஒதுக்குகிறார் எனக் குற்றம் சாட்டிய வாழப்பாடி,திமுக கூட்டணியில் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவைத் தான் ஆதரித்தார். பின்னர் வழக்கம்போல் ஜெயலலிதாவைத்திட்டினார்.

இப்போது திமுக, அதிமுக, ராமதாஸ் என எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு தனித்துக் கட்சி நடத்துவதால் பயனில்லைஎன்பதால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் ஓடியிருக்கிறார் வாழப்பாடி ராமமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X