சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
வேன்-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை பலியாயினர்.
அதே போல, மதுரையின் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரு வேனில் குற்றாலத்துக்கு சுற்றுலாசென்றனர். அங்குள்ள அருவிகளில் குளித்துவிட்டு, பாபநாசத்திற்கும் சென்றனர். பின்னர், பகலில் அவர்கள்திருச்செந்தூருக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரத்தைக் கடந்து வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்தசெல்வராஜின் காருடன் பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த செல்வராஜ் குடும்பத்தின் 5 பேரும் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
வேன் டிரைவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணைநடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications