திமுகவுக்காக ஐ.பி.எஸ். அதிகாரிகளை பந்தாடுவதா?: கம்யூனிஸ்ட்கள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய 3 தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குஇழுத்துச் செல்ல வாஜ்பாய் அரசு முயல்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தனது கூட்டணியில் உள்ள திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழிவாங்க முயல்கிறது.
கருணாநிதி கைது விவகாரத்தில் நடந்த உண்மைகள் வெளியே தெரிந்துவிடாமல் தடுக்க வேண்டும் என்றஎண்ணத்தில் தான் இந்த அதிகாரிகளை அவசர அவசரமாக மத்திய அரசுப் பணிக்கு இழுக்க வாஜ்பாய் அரசுமுயல்கிறது.
மத்திய அரசின் இந்த முயற்சி அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மத்திய-மாநில அரசுகளின் உறவுக்கும்நல்லதல்ல.
திமுகவுக்கு ஜால்ரா போட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மத்திய அரசு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது எனகம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications