சென்னை மாநகராட்சியைக் கலைப்பதா: அரசுக்கு திமுக கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி மன்றத்தைக் கலைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு திமுக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஸ்டாலின் தலைமையில் திமுக தான் அதிகாரத்தில் உள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசுஆட்சிக்கு வந்தவுடனேயே மாநகராட்சியைக் கலைத்துவிடத் திட்டமிட்டது.

மாநகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது எனக் கேட்டு மேயர் ஸ்டாலினுக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

இந் நிலையில் நேற்று நடந்த திமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தில் அரசின் இந்த முயற்சிக்கு கடும் கண்டனம்தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக அதிகாரத்தில் உள்ள மாநகராட்சி மன்றத்தைக் கலைக்க அதிமுக அரசு முயல்கிறது. இது முழுக்க முழுக்கபழிவாங்கும் போக்காகும். ஸ்டாலினை மேயராக்கியது மக்கள் தான். சென்னை வளர்ச்சிக்காக பல திட்டங்களைகடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திக் காட்டியவர் ஸ்டாலின்.

2 மாதங்களில் மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாநகராட்சியைக் கலைக்கும் அதிமுக அரசின்செயல் கடும் கண்டனத்துக்குறியது.

குடிநீர் பஞ்சம்:

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திரமாநிலத்திடம் பேசி கூடுதலாக கிருஷ்ணா நீரைப் பெறவும் ஜெயலலிதா அரசு தவறிவிட்டது.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கியது.அவர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+