வாஜ்பாயுடன் பா.ம.க. நேரடியாகப் பேசியது திமுகவுக்கு பிடிக்கவில்லை
திருச்சி:
பிரதமர் வாஜ்பாயுடன் நேரடியாகப் பேசியதை திமுக விரும்பவில்லை, அதனால் தான் பா.ம.க. மீண்டும்கூட்டணியில் இணைவதை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர்காடுவெட்டி குரு கூறினார்.
அப்போது அவர் திமுக உட்பட பா.ம.கவின் இணைப்பை எதிர்க்கும் பல கட்சிகளையும் கடுமையாகத் தாக்கிப்பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,
பிரதமர் வாஜ்பாய் அவர்களே பா.ம.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள சம்மதித்துவிட்டார்.
ஆனால், ஒரு காலத்தில் பா.ம.க.வின் தயவால் அரசியல் செய்துவந்த திமுக இப்போது நம்மை கூட்டணியில்சேரவிடாமல் எதிர்க்கிறது. அதுமட்டுமல்லாமல், மறைமுகமாகப் பல பிரச்சனைகளையும் கிளப்பி வருகிறது.
நாம் வாஜ்பாயுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதை திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.வரும் உள்ளாட்சித் தேர்தலில் யார் பா.ம.க.வின் கொள்கைகளை மதிக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணிவைப்போம்.
இல்லாவிட்டால் பா.ம.க., தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும்.
இவ்வாறு குரு அந்தக் கூட்டத்தில் பேசினார்.
மேற்கண்ட காரணங்களால்தான் ராமதாஸ் டெல்லியிலிருந்து திரும்பி 3 நாட்கள் ஆகியும், இன்னும்கருணாநிதியைச் சந்தித்துப் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.