போலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்...

Subscribe to Oneindia Tamil

க்ரைம்-1: திருச்சி- கஞ்சா

திருச்சியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி வேலாயுதநகர் பகுதியில் தனிப்போலீஸ் படை நடத்திய திடீர் சோதனையில் 2 வீடுகளில் கஞ்சாவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்காரர்கள் 2பேரையும் கைது செய்தனர்.

அதன் எடை 1 கிலோ மற்றும் அதன் மதிப்பு ரூ.3500 ஆகும்.

க்ரைம்-2: புதுக்கோட்டை- ரேசன் அரிசி

புதுக்கோட்டை அருகே அன்னவாசல் என்ற இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5,200 கிலோ ரேசன் அரிசியைபோலீசார் கைப்பற்றினர்.

கடந்த சனிக்கிழமை போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அசோகன் என்பவரது வீட்டில் நடத்தியசோதனையின் போது இந்த அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. உடனேஅரிசியைப்பறிமுதல் செய்து, அசோகனை கைது செய்தார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ.61ஆயிரம்.

க்ரைம்-3: தர்மபுரி- எரிசாராயம்

தர்மபுரியில் லாரியில் கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 7,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல்செய்தனர்.

திங்கள்கிழமை காலை வழக்கம் போல தருமபுரி நெடுஞ்சாலையில் சோதனை செய்தபோது இந்த லாரிபிடிபட்டது.டிரைவர் தப்பிவிட்டதாக மாவட்ட எஸ்.பி.அமல்ராஜ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+