போலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்...
க்ரைம்-1: திருச்சி- கஞ்சா
திருச்சியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன் எடை 1 கிலோ மற்றும் அதன் மதிப்பு ரூ.3500 ஆகும்.
க்ரைம்-2: புதுக்கோட்டை- ரேசன் அரிசி
புதுக்கோட்டை அருகே அன்னவாசல் என்ற இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5,200 கிலோ ரேசன் அரிசியைபோலீசார் கைப்பற்றினர்.
கடந்த சனிக்கிழமை போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அசோகன் என்பவரது வீட்டில் நடத்தியசோதனையின் போது இந்த அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. உடனேஅரிசியைப்பறிமுதல் செய்து, அசோகனை கைது செய்தார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ.61ஆயிரம்.
க்ரைம்-3: தர்மபுரி- எரிசாராயம்
தர்மபுரியில் லாரியில் கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 7,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல்செய்தனர்.
திங்கள்கிழமை காலை வழக்கம் போல தருமபுரி நெடுஞ்சாலையில் சோதனை செய்தபோது இந்த லாரிபிடிபட்டது.டிரைவர் தப்பிவிட்டதாக மாவட்ட எஸ்.பி.அமல்ராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications