மதுரை அருகே மேலூரில் குண்டுவெடிப்பு

Subscribe to Oneindia Tamil

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள போலீஸ் ஸ்டேசன் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சக்திவாய்ந்தவெடிகுண்டு வெடித்தது.

மேலூர் போலீஸ் ஸ்டேசன் அருகே போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியில்தான் கோர்ட், பெண்கள்பள்ளி, இலங்கை அகதிகள் முகாம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கின்றன.

அந்தக் குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் ராமசுப்பு வீட்டருகே உள்ள ஒரு முட்புதரில் ஞாயிற்றுக்கிழமை காலை10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

உடனே அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது 100 அடிஉயரத்துக்குக் கரும்புகை கிளம்பியிருக்கிறது. குண்டு வெடித்த இடத்தில் 1 மீட்டர் ஆழத்திற்கு பெரிய பள்ளமும்ஏற்பட்டுள்ளது.

உடனே இன்ஸ்பெக்டர் ராமசுப்பு கொடுத்த தகவலின் பேரில் டி.ஐ.ஜி. மகேந்திரன் மற்றும் பல உயர் போலீஸ்அதிகாரிகளும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு, மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

போலீசார் குண்டு வெடித்த இடத்தில் கிடந்த வயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றினர்.

அருகில் இலங்கை அகதிகள் முகாம் இருக்கிறது. அங்கு அகதிகளோடு அகதியாக வந்த இலங்கைத்தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்குமா அல்லது சமீபத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மேலவளவு 17கொலையாளிகளின் ஆதவாளர்களின் வேலைதான் இந்த குண்டு வெடிப்பா என்பது பற்றி போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+