தமாகா-காங்கிரஸ் இணைப்பு: "காலம் இன்னும் கனியவில்லை"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரசை காங்கிரசுடன் இணைப்பதற்கு காலம் இன்னும் கனியவில்லை என்று சோனியாவிடம்தமாகா தலைவர் மூப்பனார் தெரிவித்துள்ளார்.

நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவை எதிர்த்து,தமாகாவை ஆரம்பித்தார் மூப்பனார். ஆரம்பிக்கப்ட்ட சில நாட்களிலேயே திமுகவுடன் கூட்டணி வைத்துசட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் காங்கிரசின் நிலை மேலும் பரிதாபமானது. இதையடுத்து தமாகா தமிழ்நாட்டில் முக்கியமான ஒருகட்சியாகக் கருதப்படுகிறது.

சமீப காலமாக மூப்பனாரின் உடல்நிலை சரியில்லாததால் அவரால் முன்பு போல சுறுசுறுப்பாக கட்சிப்பணிஆற்றமுடியவில்லை. இதையடுத்து, கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பிருந்தே தமாகாவை காங்கிரசுடன் மீண்டும்இணைப்பது பற்றி பேசப்பட்டு வந்தது.

ஆனால் கட்சியிலுள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் காங்கிரசுடன் இணைவதை விரும்பவில்லை.எதற்கெடுத்தாலும் கட்சியின் மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால்அவர்கள் இந்த இணைப்பை எதிர்த்து வருகிறார்கள்.

காங்கிரசுடன் இணைவதற்குப் பதிலாக மூப்பனார் மகன் கோவிந்த வாசனைத் தலைவராக்கவே அவர்கள்விரும்புகிறார்கள். ஆனால் மூப்பனாருக்கு அதில் விருப்பம் இல்லை.

இந்நிலையில் மூப்பனார் சில நாட்களுக்கு முன் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாமற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். அப்போது,தமிழ்நாட்டில் தமாகாவை காங்கிரசுடன் இணைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று சொன்னதாகடெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, மூப்பனார் தனது மகன் வாசனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+