For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பா.ம.கவை சேர்க்க மாறனும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சரியான நேரத்தில் காலை வாரிவிட்டுவிட்டு ஓடிய பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தேசிய ஜனநாயகமுன்னணியில் சேர்க்கக் கூடாது என மத்திய அமைச்சரும் திமுக தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறன்கூறினார்.

திமுகவின் பொதுக் குழுவில் பேசிய அவர், தனது சுயநலத்துக்காக தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டுவிட்டுஅதிமுகவுக்கு ஓடியவர் ராமதாஸ்.

ஆனால், ஜெயலலிதாவிடம் அவருக்கு மரியாதை கிடைக்கவில்லை. ஜெயலலிதாவிடம் மட்டும் அல்ல, வேறுஎங்குமே அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் நமதுகூட்டணிக்கு ஓடி வர நினைக்கிறார் ராமதாஸ் என்றார் மாறன்.

அதிமுகவால் விரட்டிவிடப்பட்ட ராமதாசுக்கு திமுகவும் அடைக்கலம் தராவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சி வெறும்4 மாவட்டக் கட்சியாக சுருங்கிவிடும்.

தமிழகத்தின் 4 வட மாவட்டங்களில் மட்டும் தான் அந்தக் கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலம் உண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X