ராமன் கமிஷன் விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை
சென்னை:
கருணாநிதி கைது விவகாரத்தில் உண்மையில் நடந்ததைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ராமன் கமிஷன்விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பொது நல மனுவை தாக்கல் செய்திருப்பவர் விஜயகுமார் என்ற வழக்கறிஞர் ஆவார். மனுவில்கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த ஜூன் 30-ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர்கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாரைக் கடமை ஆற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,போலீசார் மீது ஒருதலை பட்சமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும்.
இதில் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த கோர்ட் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கைது சம்பவம்பற்றிய கேசட்களும், ஜார்ஜ்பெர்ணான்டஸ் கமிட்டி அளித்த தகவல்களும் முழுமையானது அல்ல.
மத்திய அரசு இதை ஒருதலைபட்சமாகக் கையாளுகிறது. அதனால்தான், ஜூலை 4-ந்தேதி மாநில அரசுக்குஎச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பியது.
இவ்வாறு மத்திய அரசு, மாநில அரசுகளை மிரட்டவோ, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவோ சட்டத்தில்எந்தவித முகாந்திரமும் இல்லை. மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு அணுகுமுறைகளைக்கடைபிடித்து வருகிறது.
எனவே கோர்ட் இது பற்றி விசாரித்து மத்திய அரசின் அனாவசிய தலையீட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு விஜயகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுதாரர் கூறியிருக்கும் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது இவர் ஒரு அதிமுக அனுதாபி என்பதுபுலனாகிறது.












Click it and Unblock the Notifications