போலி கன்சல்டன்சி: மாணவர்களை ஏமாற்றிய பெண் கைது
சென்னை:
சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 204 மாணவர்களை ஏமாற்றிய ஐ.டி. கன்சல்டன்ட்நிறுவனத்தின் பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சாப்ட்வேர் வேலை முதல் நர்ஸ் வேலை வரை வாங்கித் தருவதாகஒவ்வொருவரிடமும் ரூ. 1 லட்சம் வரை இந்த நிறுவனம் வசூலித்தது. இப்படி 204 பேரிடம் இந்த நிறுவனம் பணம்வசூல் செய்தது.
ஆனால், தீடீரென் நிறுவனத்தை மூடிவிட்டு மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டமாணவ, மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் குமார் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பறிமுத்ல செய்யப்பட்டது.
ஆனால், பூஜா வேணுகோபாலும், வேணுகோபாலும் தப்பிவிட்டனர். இவர்கள் பெங்களூரில் மறைந்திருப்பதாகதகவல் வந்ததையடுத்து சிறப்புப் படை பெங்களூர் விரைந்தது. குயீன்ஸ் ரோட்டில் ஒரு அப்பார்ட்மென்டில்பதுங்கியிருந்த பூஜாவை போலீசார் சனிக்கிழமை இரவில் கைது செய்தனர். ஆனால், வேணுகோபால்பெங்களூரிலிருந்து தப்பி பூனாவுக்கு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவரிடமிருந்து ரூ. 1.25 லட்சம் பணம், 20 பவுன் நகை, 1.25லட்சம் மதிப்புள்ள லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வேணுகோபாலைத் தேடி தனிப்படை பூனா விரைந்துள்ளது. இந்த வேணுகோபால் ஆந்திராவில் இதுபோன்று பலமோசடி நிறுவனங்களை நடத்தி வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
போலி மார்க் சர்டிபிகேட் முதல், வேலை பார்த்ததற்கான போலி எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் வரை வாங்கிக்கொடுப்பதில் வல்லவர். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications