அரசுத் திட்டங்களை மக்களுக்கு அளிப்பது கலெக்டர்கள் கடமை: ஜெ.
சென்னை:
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் மாவட்ட கலெக்டர்களின் தலையாயகடமையாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மக்களுக்குச் சென்று சேரும் திட்டங்களில் பெரும்பான்மையானவை, முழுதாகச் சென்று சேர்வதில்லை என்ற புகார்பரவலாகவே இருந்து வருகிறது. செல்லும் வழியிலேயே பல விதங்களிலும் அவை சுரண்டப்படுகின்றன என்றுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தகைய புகார்கள் எதுவும் வராமல், மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கே முழுமையாகச் சென்று சேர்ப்பதேமாவட்ட கலெக்டர்களின் கடமையாகும்.
அதே போல, மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் போலீஸ் அதிகாரிகள் முழு மூச்சுடன்செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் மூலமாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலமாகவும் நம்சமூகத்திற்குப் பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க மாவட்ட கலெக்டர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
மக்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சமூகப் பொருளாதாரப் பிரச்சனையும் ஒரு முக்கிய காரணமாகும்.இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் போலீஸ் அதிகாரிகள் முன் வந்து, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications