தாமரைக்கனியின் மகன் மனித உரிமை கமிஷனிடம் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எனது தந்தை தாமரைக்கனியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமரைக்கனியின்மகன் தங்கமாங்கனி மனித உரிமை கமிஷனில் புகார் கொடுத்துள்ளார்.
அவரை போலீசார் கடுமையாக தாக்கியதால் , அதனால் அவருக்கு உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனி,சென்னையில் உள்ள மனித உரிமை கமிஷனரிடம் புதன்கிழமை புகார் மனு கொடுத்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மனித உரிமை கமிஷன் நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார். மனு மீதான விசாரணை இந்த மாதம் 10ம் தேதி நடக்கிறது.












Click it and Unblock the Notifications