For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்காதல்: காதலனுடன் பெண் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

தன்னுடைய கள்ளக்காதல் கணவனுக்குத் தெரிய வந்ததால், ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள அரியங்குப்பத்தில் தன் கணவனுடன் வாழ்ந்த வந்தவர் சிவகாம சுந்தரி. இவர்திருமணத்திற்கு முன் சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னாஎன்பவர் மேல் காதல் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சிவகாம சுந்தரிக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்குபின்பும் பிரசன்னாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருந்தார் சிவகாம சுந்தரி.

இந்நிலையில் இவர்களுடைய கள்ளத் தொடர்பு சிவகாம சுந்தரியின் கணவருக்குத் தெரிய வந்தது. இவர்கள்இருவரும் ஒருநாள் சிவகாம சுந்தரியின் கணவரிடம் கையும், களவுமாகப் பிடிபட்டனர்.

இதையடுத்து சிவகாம சுந்தரியும், அவரது கள்ளக்காதலன் பிரசன்னாவும் சிவகாமசுந்தரியின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X