தமிழகத்தில் பச்சை நிற மழை
கம்பம்:
தமிழக - கேரள எல்லையோர நகரங்களில் பச்சை நிறத்தில் மழை பெய்துள்ளது.
கேரளாவில் பல இடங்களில் சிவப்பு நிறத்தில் மழை பெய்தது. இதைக் கண்ட மக்கள் பயந்தனர். கிணறுகளும்மண்ணோடு மண்ணாக மாறியது மக்களை மேலும் அச்சப்படுத்தியது.
இந்நிலையில் தமிழக-கேரள எல்லையோர நகரங்களான கட்டப்பனை, வண்டிப் பெரியாறு, வண்டன்மேடு,ஆறாம்வயல் ஆகிய இடங்களில் பச்சை நிற மழை பெய்தது.
மக்கள் இதை ஆர்வமாக பாட்டில்களில் சேகரித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மழை நீர் மஞ்சள் நிறத்துக்குமாறியது. இதைக் கண்டதும் மக்களிடையே பயம் பரவியது.
பச்சை நிற மழை நீரை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவுவெளிவந்தால்தான் மழை நிறம் மாறி பெய்ததற்கான காரணம் தெரியும்.
கேரளாவில் பெய்த சிவப்பு மழைக்குக் காரணம் எரி நட்சத்திரம்தான் என்று கூறப்பட்டது. வானத்தில் இருந்துஅடிக்கடி சில எரி நட்சத்திரங்கள் எரிந்து பூமியை நோக்கி விழுவதுண்டு. அப்போது, அந்த எரி நட்சத்திரத்தின்துகள்கள் மேகத்தில் கலந்ததால் ஏற்பட்டதுதான் சிவப்பு நிற மழை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications