Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. அனுமதித்தால் வீரப்பனை சரணடையச் செய்வேன் - நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனை பிடிப்பதற்காக அரசு வீண் செலவு செய்யவேண்டிய அவசியமில்லை. அரசு அனுமதித்தால் நான்காட்டுக்குச் சென்று வீரப்பனை அழைத்து வருகிறேன் என்று மதிழர் தேசி இயக்கத்தின் தலைவர் நெடுமாறன்கூறினார்.

கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்று வீரப்பன் 100 நாட்களுக்கு மேல் காட்டில் பிணயக்கைதியாக வைத்திருந்தான். அப்போது அவரை மீட்டுவர கர்நாடக அரசும், தமிழக அரசும் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டது.

இதற்காக பல கடத்தல் பிரச்சனைகளுக்கு அரசின் தூதுவராகச் சென்ற "நக்கீரன்"கோபால், ராஜ்குமாரை மீட்ககாட்டிற்குப் பல முறை சென்று வந்தார். ஆனால், அவரது முயற்சி பயனளிக்கவில்லை.

முன்னதாக, வீரப்பனோடு காட்டில் அலையும் தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பினர்தான்நெடுமாறனையும் அனுப்ப வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்பட்டது. இதனால், தூதர் குழுவில்நெடுமாறனையும் தமிழக அரசு சேர்த்தது.

பிறகு, நெடுமாறன் மற்றும் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்யாணி, டாக்டர் பானு போன்றவர்கள் ராஜ்குமாரைமீட்டுவந்தனர். இப்படித்தான் வீரப்பனுக்கும் நெடுமாறனுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசும் கர்நாடக அரசும் வீரப்பனைப் பிடிப்பதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசு மட்டும் கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடிக்குமேல் செலவு செய்துள்ளது. இந்தப்பணத்தை மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்குச் செலவிடலாம் .

மேலும், தமிழக அரசு அனுமதித்தால் நான் வீரப்பனைச் சந்தித்து சரணடைவதற்காகப் பேச்சுநடத்துவேன் என்றுநெடுமாறன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+