சென்னையில் கள்ளச் சாராய வேட்டை தீவிரம் - 1,345 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடந்த சனிக்கிழமை விஷச் சாராயம் அருந்தியதால் 13 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து,போலீசார் நடத்திய தீவிர கள்ளச் சாராய வேட்டையில், இதுவரை 1,345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாராயம் கள்ளத் தனமாக காய்ச்சப்படுவதைப் பிடிக்க போலீசார்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த வேட்டையில் இது வரை 371 பெண்கள் உட்பட 1,345 பேர் கைது செய்யப்பட்டுளளனர். அவர்களிடமிருந்து,ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் அதைக் காய்ச்சுவதற்குத் தேவையான பல பொருட்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications