காதலியை எரித்துக் கொன்ற கள்ளக் காதலன்
கரூர்:
பெண் ஒருவர் அவரது கள்ளக் காதலனால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இந்தகொடூரமான சம்பவம் கரூர் மாவட்டம், குளித்தலைக்கு அருகே உள்ள குப்பாரெட்டிப்பட்டிஎன்ற கிராமத்தில் நடந்துள்ள்து.
குப்பாரெட்டிப்பட்டியில் வசித்து வந்த ராணி (வயது 35) திருமணமாவர். இவர் சில காலம்முன்பு தன் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டார்.
அதன் பின் தன்னைவிட வயதில் குறைந்த சண்முகம் (வயது 21) என்பவருடன் கள்ளக்காதல் கொண்டிருந்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சண்முகத்தை வற்புறுத்தி வந்தார் ராணி. ஆனால்,ஏதாவது காரணம் சொல்லி திருமணத்தை தட்டிக் கொண்டு வந்தார் சண்முகம். ஆனால்,தொடர்ந்து அவர் ராணியின் வீட்டிற்கு வந்து போய் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சண்முகத்திற்கும், ராணிக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் முற்றிசண்டையாக மாறியது. இதில் கோபம் கொண்ட சண்முகம் ராணியை கயிறு ஒன்றால் கட்டி தீவைத்து கொளுத்தினார்.
இதில் ராணி உயிருடன் எரிந்து சாம்பலானார்.
ராணியின் அலறல் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்த்து வீட்டுக்காரர்களால் ராணியைகாப்பாற்ற முடியாவில்லை. ஆனால் அவர்கள் சண்முகத்தை பிடித்து போலீசில்ஒப்படைத்தனர்.
ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications