For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதி- பா.ம.க.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுசெயலாளரும், எம்.எல்.ஏவுமான முருகவேல்ராஜன் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தலித் கட்சிகளான புதியதமிழகம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய 2 கட்சிகளின்தலைவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசுக்கும் அறிக்கைப்போர் நடந்துவருகிறது.

இவர்களில் தினம் ஒருவர் மற்றவரைத் தாக்கிப்பேசி வருவது வழக்கமாகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் பா.ம.க. அதிமுக கூட்டணியை விட்டு வெளியில் வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில்சேர்ந்தததுதான்.

இதுவரை தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பா.ம.க. இல்லாத அணி எது என்று பார்த்து தலித் கட்சிகள் சேரும்.ஆனால் பா.ம.க.வினர் அதுபற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,சேரவேண்டும் என்று நினைத்தால் சேர்ந்து விடுவார்கள். இதுதான் இதுவரை நடந்து வந்த அரசியல் நிகழ்வுகள்.

இந் நிலையில் விடுதலைச்சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இருக்கும் தே.ஜ கூட்டணிக்கு பா.ம.க வந்து சேர்ந்துவிட்டது.

விடுதலைச் சிறுத்ததைைகளின் கொள்கைப்படி பா.ம.க இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. அதனால் 2அணியினருக்கும் இடையே தினமும் வசை மழைதான்.

இதைத்தொடர்ந்து, பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எங்கள் தலைவர் ராமதாஸைப் பார்த்து சந்தர்ப்பவாத அரசியல்செய்வதாகக் கூறுகிறார். ஆனால், கிருஷ்ணசாமிதான் சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந்துவந்திருக்கிறார்.

அவர் படிக்கும்போது தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்றும் லெனினிஸ்ட் என்றும் சொல்லிக் கொண்டு கம்யூனிஸ்ட்வாதியாகக் காட்டிக்கொண்டார்.

பிறகு அதிலிருந்து மாறுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு அதுசரியில்லை என்று சொல்லிவிட்டு, திமுகவிடம் அடைக்கலம் புகுந்தார்.

திமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுப் பார்த்தார். வெற்றிபெறமுடியவில்லை. பிறகு அங்கிருந்துகழன்றுகொண்டு தேவேந்திர குல வெள்ளாலர் அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டார். பிறகுபுதிய தமிழகம் என்று கட்சியை ஆரம்பித்துள்ளார்.

இப்படி தன் வாழ்நாளில் தாவுவது ஒன்றையே கொள்கையாக வைத்திருப்பதால் தனது அடையாளத்தைஇழந்துகொண்டிருப்பவர் கிருஷ்ணசாமி.

உண்மையில் இவர்தான் சந்தர்ப்பவாதி. அதன் முழுமொத்த உருவமும் இவர்தான். இவரெல்லாம் சந்தர்ப்பவாதம்பற்றிப் பேசக்கூடாது.

இவ்வாறு முருகவேல்ராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X