காஷ்மீர் கோயில்களை பாதுகாக்க பரூக் புதிய திட்டம்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள இந்துக் கோயில்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தனிக் கமிட்டி அமைக்கமுதல்வர் பரூக் அப்துல்லா முடிவுசெய்துள்ளார்.
அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர், கோயில்களை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 3 பேர் கொண்ட குழுஅமைக்கப்படும் என்றார்.
அந்தக் குழுவுக்கு அவரே தலைவராக இருக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் "தர்கானா" என்ற அமைப்பின்தலைவர் பி.என்.டாகு, இந்தக் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பார் என்றும், முதல்வரின் சிறுபான்மைவிவகாரத்துறை ஆலோசகராக இருக்கும் சதீஸ் ரைணா செயலாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கமிட்டி, காஷ்மீரில் உள்ள அனைத்து கோயில்கள் பற்றியும், அதன் நிலைமை பற்றியும் முதலில் அறியும்.பிறகு, பாழடைந்த கோயில்களைப் புதுப்பிப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று பரூக் உறுதியளித்தார்.
சமீபத்தில் அமர்நாத் தேவஸ்தானம் போர்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது அமர்நாத் குகைக் கோயிலில் வசதியைப்பெருக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் வழிவகுக்கும். மேலும் பாகல்காம் என்ற இடத்திலிருந்து அமர்நாத்துக்குபுதிய பாதை போடவும் இந்தக் கமிட்டி முயற்சிக்கும் என்றார்.
தற்போது முடிந்த அமர்நாத் யாத்திரை மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது என்றதகவலையும் பரூக் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications