Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரணியில் மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ. மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியின்போது காயமடைந்து மயக்கமடைந்த சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏவானவை.பெருமாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை இறந்தார்.

திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணியின்போது திடீர் வன்முறை ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் திமுகவினரைக் கலைத்தனர். இதில் படுகாயமடைந்த 5 திமுகவினர்உயிரிழந்தனர்.

பெருமாள் சென்ற ஜீப் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் வை. பெருமாள் உள்ளிட்ட ஜீப்பில் இருந்த பலரும்காயமடைந்தனர். கலாட்டாவால் அதிர்ச்சியடைந்த அவருக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து கூட்டத்தைக்கட்டுப்படுத்த அவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அமைதியாக இருக்குமாறு திமுகவினரை அவர் நெடு நேரம் மைக் மூலம்கேட்டுக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பேசியதால் அவருக்கு மயககம் ஏற்பட்டது. அங்கேயே பெருமாள் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலைபெருமாள் இறந்தார்.

திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் வை.பெருமாள். சைதாப்பேட்டைதொகுதியில் வழக்கமாக திமுக சார்பில் போட்டியிடும் கா.கிட்டுவுக்கு உடல் நலமில்லாமல் போனதால் அவருக்குப் பதில் கடந்ததேர்தலில் வை.பெருமாள் போட்டியிட்டார்.

பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்ட பழுத்த தொழிற்சங்கவாதியான பெருமாள் மிகுந்த அமைதியான குணம் படைத்தவர்.தீவிர திமுககாரர். நீண்டகாலமாக அரசியலில் பெரிய பொறுப்புகள் வகிக்காத அவருக்கு கடந்த தேர்தலில் தான் எம்.எல்.ஏ. சீட்கிடைத்தது.

முழு மூச்சுடன் திமுகவுக்காக உழைத்து வந்த பெருமாள் மரணமடைந்துள்ளது திமுக தலைவர் கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

வை.பெருமாளின் உடலுக்கு திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகனும், சென்னை மேயர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர்அஞ்சலி செலுத்தினர்.

போலீஸ் மறுப்பு:

பேரணியில் கலந்து கொண்டிருந்த போது, பெருமாளுக்குக்கு மயக்கம் ஏற்பட்டு, திங்கள்கிழமை காலைமருத்துவமனையில் இறந்தார் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், போலீசார் இதை வன்மையாகமறுக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே நெஞ்சு வலி காரணமாக, பெருமாள் அப்போலோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார். அவர் திமுக பேரணியில் கலந்து கொள்ளவே இல்லை என்று போலீசார் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+